நமக்கு மூளை என்று ஒன்று இருந்ததாமே எங்கே அது என்று தேடக்கூடிய அளவிற்கு மழுங்கி போனதை இன்னமும் உணராமல் சொரனையற்ற ஜென்மமாய் திரிந்து கொண்டு இருக்கிறோமே எப்படி நம்மால் மட்டும் முடிகிறது,,,
வழக்கறிஞ்சர் பிள்ளைகள் படித்து வழக்கறிஞ்சர் ஆவது
மருத்துவர் பிள்ளை படித்து மருத்துவர் ஆவது
விவசாயி பிள்ளை விவசாயி ஆவது ,,,அதுபோலதனே
எங்கள் தலைவர்களின் பிள்ளைகளும் படித்தோ படிக்காமலோ தலைவர்களாவது தானே நியாயம் .இதை சிலர் குடும்ப அரசியல் என்று கூறுவது எந்த
வகையில் நியாயம் ????
ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்தால் எவ்வளவு பெருமையான விஷயமோ அதை விட பெருமையான விஷயம் ஒன்று இருக்கிறது,,, அது எங்கள் இந்தியர்களின் வங்கி கணக்கு இந்தியாவில் அல்ல சுவிஸ்சில் ,,, நாம்தானே முதல் இடத்தில உள்ளோம்
,,இதெல்லாம் நம்முடைய சாதனை அல்லவா,,,,,(http://taxguru.in/finance/swiss-bank-revealed-indian-have-more-money-then-rest-of-the-world.html ) இவர்களுடைய தோராய கணக்குப்படி நாற்பத்தைந்து கோடி ஏழை இந்தியர்களுக்கு ஆளுக்கு தலா ஒரு லட்ச ருபாய் கொடுக்கலாம் ,,,, அனால் அவை அனைத்தும் அங்கே உறங்கி கொண்டு இருக்கின்றன சொகுசாய்,,,,,இவ்வளவு பணமும் நமக்கு தெரியாமல் அரசியல்வாதிகள் துணையோடு சேர்த்து வைத்திருக்கும் நல்லவர்கள் நிறைய பேர் உள்ளனர் அதில் அரசியல்வாதிகளும் அடங்குவர் ,,,,
நம் தலைவர்கள் சொகுசாய் குளிர் சாதன அறையில் தூங்கினால் தானே தொண்டர்கள் நமக்கு கொசு கடிக்கும் இடத்தில் தூக்கம் வரும்,,,
நம் தலைவர்கள் கார்களில் சென்றால் தானே நமக்கு ஓட்டுவதற்கு மிதிவண்டியாவது கிடைக்கும்
நம் தலைவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நம்முடைய வீட்டிற்கே வருவார்கள் அல்லவா அது எவ்வளவு பெருமையான விஷயம் நமக்கு,,,
நம் தலைவர்கள் கால்களில் விழுவதை விடவா சிறந்தது நம் பெற்றவர்களின் கால்களில் விழுவது ,,,, ச்சி எவ்வளவு கேவலமானது அல்ல
நம் தலைவர்களுக்கு ஆயிரம் செருப்புகள் வேண்டும் நடப்பதற்கு விதவிதமாய் ,,அதுதானே செருப்பு இல்லாத நமக்கு பெருமை
நம் தலைவர்களின் வாரிசுகள் அயல் நாட்டில் படித்தால் தானே நம் வாரிசுகள் ஆலமரத்தடியில் படிக்கும்
நம் தலைவர்கள் கொட நாட்டில் ஓய்வெடுத்து சுகமாய் இருந்தால் தானே ,,நாம் கோடை வெய்யிலில் ஓய்வின்றி உழைக்க முடியும்
நம் தலைவர்களின் வளர்ப்பு பிள்ளை திருமணத்திற்கு நூறு கோடி ரூபாயில் செலவு செய்ததால் நமக்கு எவ்வளவு பெருமை,,,நம் பிள்ளைகளுக்கு திருமணம் என்பது கேள்வி குறியாக இருக்கும் போது,,,,
நம் தலைவர்களின் கொள்கையே நம் கொள்கை ,,,,,இன்று இந்த கட்சியுடன் கூட்டணி நாளை அந்த கட்சியுடன் கூட்டணி என்று எப்படி மாறினாலும் நமக்கு சூடு சொரணை எதுவும் இல்லாமல் சொல்லுவோம் ,, வாழ்க வாழ்க ஒழிக ஒழிக ,,,, அந்த வார்த்தைகளை பேச மட்டுமே நம்மால் முடியும் அது மிக பெரிய விஷயமாயிற்றே ,,,,
http://en.wikipedia.org/wiki/Category:Political_parties_in_India இதுவும் கூட சாதனை தான்,,,, நம் நாட்டில் எத்தனை கட்சிகள் ,,,நமக்கே தெரியாமல் .
ஜாதிக்கு ஒரு கட்சி இருந்தால் தானே நம்ம ஜாதிக்கு பெருமை.நம்ம இந்தியாவுக்கு பெருமை ,,,, வேற்றுமையில் ஒற்றுமை ,,,, மன்னிக்கவும் வேற்றுமையில் வேற்றுமை,,,,
http://timesofindia.indiatimes.com/india/At-Rs-84-crore-Jagan-Mohan-sets-pace-with-advance-tax-payment/articleshow/6731651.cms இதை போன்று நல்லவர்களும் நம் நாட்டில் உள்ளனர்,,, கேவலம் எண்பத்தி நான்கு கோடி வரிப்பணம் முன்கூட்டியே செலுத்திய கதாநாயகர் நம் இந்தியாவில் உண்டு,,, அவர் போன வருடம் செலுத்தியது ஆறு அரை கோடி வரிப்பணம் அனால் இந்த வருடம் எண்பத்தி நான்கு கோடி ,,,ஆயிரத்து நூறு சதவிகிதம் அதிகமாக அதுவும் ஒரே வருடத்தில் ,,,, யாரால் முடியும் சொல்லுங்கள்,,,,அவருடைய சொத்து மதிப்பு பத்து வருடங்களுக்கு முன்பு எவ்வளவு என்று யோசித்தா பார்க்க போகிறோம்,
நம் அரசியல்வாதிகள் படிக்காத காரணத்தினால் தான்,,, கல்வி சேவைக்காக பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்,,, கல்வியை இலவசமாக சொல்லி கொடுத்தால் நன்றாகவா இருக்கும்,,, அதனால் தான் பல லட்சங்களை நன்கொடையாக மட்டும் பெறுகின்றனர் ,,
நாம் யாருக்கு ஒட்டு போடுவோம்,,, கொலை செய்யும் வீரமானவர்களுக்கு ,லஞ்சம் வாங்கும் நேர்மையனவர்களுக்கு ,கூடிய விரைவில் அவர்கள்
தங்கள் கல்வி நிறுவனங்களில் பின்வரும்
படிப்புகளை ஆரம்பித்தால் ஆச்சிரியபடுவதற்கு இல்லை ,,,,,
படிப்புகளை ஆரம்பித்தால் ஆச்சிரியபடுவதற்கு இல்லை ,,,,,
Masters in murder
Masters in corruption
Masters in family politics
Masters in robbery
Masters in Making alliance
Masters in making money
இவர்களுக்காக நம் வேர்வையை சிந்தி பாடுபடுவதிலே நமக்கு எவ்வளவு சுகம்,,,, நம் வீடு எக்கேடு கேட்டு போனால் என்ன,,, என் தலைவன் தலைவி நல்ல இருக்காங்களா அதுவே எனக்கு போதும்,,,,
நம்முடைய மூளை சிந்திக்க ஆரம்பித்து விட்டால் ஆபத்தாகி விடும் அவர்களுக்கு என்று நன்கு அறிந்தவர்கள் அவர்கள்,,,அதனால் தான் நம்முடைய மூளையை மழுங்கடித்து விட்டனர் ,,,,,
நாம் திருந்தி விட்டால் என்ன ஆவது இந்த தேசம்,,,,
No comments:
Post a Comment