Here am going to write something what i know.please forgive me if you wont like.Feel free to call me on my mobile 9600135653.my mail id balabala2007@gmail.com

Thursday, October 14, 2010

ச்சி தொடாதே!!! !!!

நான் எனது பைக்கில் சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது , எனக்கு முன்பு காரில் ஒரு குடும்பத்தார் பயணித்து கொண்டு இருந்தனர் , அந்த காரில் அழகான ஒரு சிறுமி நான்கு ஐந்து வயதிருக்கும் தன்னுடைய குட்டி நாயுடன் விளையாடி கொண்டு இருந்தாள், நான் அவளை பார்த்து என்னுடைய கையை அசைத்தேன் அவள் அழகாக சிரித்தால். அந்த நேரம் வண்டியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது காரணம் சிகப்பு விளக்கு எரிந்தது.அப்பொழுது அந்த காரின் அருகே வேகமாக ஒரு சிறுமி ஓடி வந்து தன்னுடைய கையை ஏந்தினால் அப்பொழுது காரில் இருந்த சிறுமி என்ன  நினைத்தாளோ தன்னுடைய கையால் அவள் கையை தொட எத்தனித்தால்,திடீர் என்று ஒரு குரல்..ச்சி தொடாதே அந்த அசிங்கத்தை என்று,உடனே காரில் இருந்த சிறுமி கொண்டு வந்த வேகத்தை விட வேகமாக எடுத்து தன்னுடைய நாயின் மீது வைத்துகொண்டாள்.கையேந்தியே சிறுமி ஒன்றும் புரியாமல் சென்றாளோ இல்லை அவளுக்கு பழகிய


வார்த்தைகளோ என்று தெரியவில்லை . நான் என் தலையை சற்று எட்டி காருக்கு
உள்ளே பார்த்தேன் அந்த சிறுமி தன் கையை நாய் மலம் கழிக்கும் இடத்தில்
வைத்திருந்தாள்!!!


No comments: