அடிமைகளாய் ஏற்க துணியும்
அன்பில்லாத பிச்சைக்காரர்களே
கண்ணுக்கு தெரியாத கடவுளுக்கு தனியறை கொடுக்க தெரிந்த உனக்கு
கண்ணுக்கு தெரிந்த கடவுள்களுக்கு வீட்டில் இருக்க இடமில்லையா ?
ஐந்தறிவுள்ள ஜீவனுக்கு பசியாற்ற சோறு போட முடிந்த உன்னால்
ஆறறிவுள்ள ஜீவன்களுக்கு பசியாற கொடுக்க உணவு இல்லையா ?
நீ பெற்ற குழந்தைகளோடு அன்புடன் வாழ தெரிந்த உனக்கு
உன்னை பெற்றெடுத்த ஜீவன்களோடு அன்புடன் வாழ தெரியாமல் போனது எப்படி?
தன் கருவறையில் இடம் கொடுதவளுக்கும்
தன் வியர்வையால் உன்னை உயர்தியவற்கும்
நீ கொடுக்கும் பரிசு முதியோர் இல்லம்.
உனக்கு கோடி கணக்கில் பணம் இருந்தாலும்
நீ என்றும் அன்பில்லாத பிச்சைக்காரன்தான்....
No comments:
Post a Comment