Here am going to write something what i know.please forgive me if you wont like.Feel free to call me on my mobile 9600135653.my mail id balabala2007@gmail.com

Saturday, October 23, 2010

சொல்ல மறந்த வார்த்தைகள் !!!

நெடு நாட்களாய் எழுத நினைத்த ஒன்றை எழுத முற்படுகிறேன் 
முடியவில்லை என்னால் வார்த்தைகள் நட்சத்திரங்களை போல சிதறி கிடக்கிறது 

எழுத நினைத்த அவளோ இன்று என்னுடன் இல்லை,,,
பின் எதற்காக எழுதிகிறாய் என்று என் மூளை கேட்கிறது ???
இருக்கும் பொழுது சொல்ல நினைத்தவைகளை இப்போதாவது 
சொல்லிவிடு அவள் இருப்பதாய் உணர்ந்து என்று என் மனது விம்மியது,, 

அவள் கோபமாக பார்க்கும் பார்வையை ரசிப்பதற்காக பொய்யான சண்டை போட்டதும் ,,
அவள் அழகான கால் கொலுசின் சத்தத்தை அவளுக்கு தெரியாமல் ரசித்து கேட்டதும்  
அவள் விரலின் சுவையறிய என் விரலை நான் வெட்டிக்கொண்டதும் 
அவள் இதழ்களில் இருந்து வரும் சிரிப்பிற்காக பல கோமாளித்தனங்களை நான் செய்ததும்
அவள் அழகான  முகத்தை காண நான் பேருந்து நிறுத்தத்தில் தவமாய் நின்றதும் 
அவள் இடம் நான் சொல்லாமல் விடுத்த வார்த்தைகள் பல உண்டு ,,

நெடும்தூரம் சென்றவள் ,,என் கண்ணில் இருந்து மறைந்தாலே தவிர என் நினைவுகளில் இருந்து அல்ல ,,,,
காற்று மேகத்தை தழுவும் பொழுது மழை வரும் அது போல 
இன்றும் அவளின் நினைவலைகள் என்னை தழுவும்  பொழுது கண்ணில் நீர் வருகிறது ,,,,,

No comments: